பாஜக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வேண்டும்… முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் ஆர்பாட்டம்

சலூன் கடைகளை மூடி, முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் ஆர்பாட்டம்.. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேவுள்ள மானியதள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருடைய சலூன் கடையினை பா ஜ க நிர்வாகியும், மானியதள்ளி  ஊராட்சி மன்ற தலைவருமான சிவசக்தி என்பவர் தனது சொந்த ரியல் எஸ்ட்டேட் சுய லாபத்திற்காக சலூன் கடையினை இடித்து தள்ளி விட்டார், 

சம்மந்தபட்ட சிவசக்தியை கைது செய்யவேண்டுமென கோரி, தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம்,முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர்,   மக்கள் அதிகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  இணைந்து பி எஸ் என் எல் அலுவலகம் எதிரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

தருமபுரியிலுள்ள சலூன் கடைகள் மூடிய  முடி திருத்தும் தொழிலாளர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.. சிவசக்தியை கைது செய்துவேண்டும், இடிக்கப்பட்ட கடையினை மீண்டும் கட்டி தரவேண்டும் எனக்கூறியும் சிவசக்தியை கண்டித்து முழக்கமிட்டபடி ஆர்பாட்டம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *