காலி  மது பாட்டில்களை வைத்து மாணவர்கள் வினோத போராட்டம்…!

உளுந்தூர்பேட்டை அருகே அதையூர் கிராமத்தில் வகுப்பறையில் கிடந்த காலி  மது பாட்டில்களை வைத்து மாணவர்கள் போராட்டம்

உளுந்தூர்பேட்டை அருகே அதையூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.  இந்தப் பள்ளியில் அதையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் தினந்தோறும் மது பாட்டில்கள் அதிக அளவில் கிடப்பதாகவும் மேலும் மது பாட்டல்களில் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறி வந்த நிலையில்,  

இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் அதிக அளவில் காலி மது பாட்டில்கள் இருந்ததால் இதனை கண்டித்து மதிய உணவு இடைவேளை போது பள்ளியின் வெளியே அமர்ந்து மாணவ,  மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலந்து சென்றனர். காலி மது பாட்டில்களுடன் மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *