காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இனிப்புக்கு பதிலாக தக்காளி வழங்கிய விசிகவினர்
ஈரோட்டில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு இனிப்புக்கு பதிலாக தக்காளி வழங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொண்டாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் காமராஜரின் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு காமராஜரின் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இனிப்புகளுக்கு பதிலாக தற்போது பொது மக்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள தக்காளிகளை வழங்கினர். தட்டுகளில் இனிப்புக்கு பதில் தக்காளியை எடுத்து சென்று விநியோகித்தது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பிற கட்சியினரை திரும்பி பார்க்க வைத்தது.