நடுரோட்டில் பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி பரபரப்பு செய்த இளைஞர்கள்

பூ மாலை, பட்டாசு, பட்டா கத்தியுடன் நடுரோட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள். அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்.

காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று இளைஞர்கள் யமஹா பைக்கை நிறுத்திவிட்டு அதன் மீது பிறந்தநாள் கேக்கை வைத்து அதை பட்டாகத்தியை கொண்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். 

அதோடு இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடியதாக பூவரசன் என்ற இளைஞருக்கு ஆள் உயர பூ மாலை அணிவித்து, சரவெடிகளை கொளுத்தி நடுரோட்டில் வீசி பந்தா காட்டியுள்ளனர். 

மிகவும் பரபரப்பான சாலையில் நள்ளிரவில் சாலையோரம் கையில் பட்டாசு, பட்டா கத்தியுடன் நின்று கேக் வெட்டி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நேரத்தில் அவ்வழியாக பயணித்த பாதசாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *