முதன்மை காவலரை குடிபோதையில் தாக்கிய மூன்று நபர்கள் கைது…!

கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற‌ முதன்மை காவலர் பாலமுருகன்னை குடிபோதையில் தாக்கிய மூன்று நபர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்  வாய்க்கால் தெருவில் மதுரைவீரன்,மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. மதுரை வீரன்,மாரியம்மன் சுவாமிகளுக்கு நேர்த்திக்கடனாக பெண்கள் தங்களின் வீட்டிலிருந்து முளைப்பாரி கோவிலுக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டு வீதிகளில் உலா வந்து கொண்டிருந்தது போது 

திருவிழாவிற்கு பாதுகாப்பாக பணியில் ஈடுபட்ட வேடசந்தூர் காவல் நிலைய முதன்மை காவலர் பாலமுருகன் அவர்களை  கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன்(32)மாரிமுத்து(எ) காட்டுபூச்சி(27)வெள்ளைச்சாமி(40) மூன்று நபர்கள் முளைப்பாரியை பெண்கள் தலையில் வைத்து கோவிலுக்கு கொண்டு வருகின்ற போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியும் வெடியை சாலையில் வைத்த பொதுமக்கள் அச்சுறுத்தும் விதமாக செயல்பட்ட இளைஞர்களிடம் ஓரமாக வைக்குமாறு காவலர் பாலமுருகன் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து குடிபோதையில் இருந்த இளைஞர்கள் வெடியை எடுத்து காவலர் மீது தூக்கி எறிந்ததில் அவருக்கு காலில் அடிபட்டுள்ளது மேலும் காவலரை கடுமையாக தாக்கியுள்ளனர்.காவலர் பாலமுருகன் தனது செல்போனில் அதை வீடியோ எடுக்க முயன்ற போது செல்போனையும் புடுங்கி கீழே போட்டு உடைத்து உள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் காவல்துறையினர் உடனடியாக மூவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *