ஒரு வயது மகனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானுல் விஷத்தை குடித்த தந்தை…!
உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் தனது ஒன்றரை வயது மகனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாடிக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் அருண்., கட்டிட தொழிலாளியான இவருக்கும் இவரது மனைவி ஜீவிதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்தாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மனைவி ஜீவிதா தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த அருண் தனது ஒன்றரை வயது மகனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
இவருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒன்றரை வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்