மீனவர்களை குறி வைத்து விற்கப்படும் கலப்பட டீசல்… ஒருவர் கைது..!
தூத்துக்குடியில் மீனவர்களை குறி வைத்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 3000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் ஒருவர் கைது லோடு வேன் பறிமுதல் சிப்காட் காவல் துறையினர் நடவடிக்கை.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் எப் சி ஐ குடோன் அருகே சிப்காட் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது ஒரு லோடு வேனை பிடித்து சோதனை செய்ததில் அதில் 15 பேரல்களில் சுமார் 3000 லிட்டர் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது இதைத்தொடர்ந்து வேனை ஓட்டி வந்த உடன்குடியை சேர்ந்த டிரைவர் ஜான் கென்னடி என்பவரை கைது செய்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புணர்வு துறை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இந்த கலப்பட டீசல் தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீனவர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது இதைத் தொடர்ந்து 3000 லிட்டர் கலப்பட டீசல் மற்றும் லோடு வேனை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வளங்கள் குற்ற புலனாய்வு காவல்துறையினர் இந்த கலப்பட டீசல் விற்பனை தொடர்பாக கணேசமூர்த்தி செல்வகுமார் ஆகியோரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.