இமாச்சலம் பகுதியில் சாகச சைக்ளிங் சென்ற 6 பேர் மாயம்… அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இமாச்சலம் பகுதியில் சாகச சைக்ளிங் மேற்கொள்ள சென்ற சேலத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட 6 பேர் குறித்து தகவல் கிடைக்கவில்லை, எனவே மீட்டு தர வேண்டும் என உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை.
சேலம் கோரிமேடு மற்றும் கன்னங்குறிச்சி பகுதியில் இருந்து பெடல் சைக்கிள் அகடாமி சார்பில் நிஷாந்த் (9), புவன் ஸ்ரீ(10) , நித்யஸ்ரீ (11), நர்முகை(10), பிரதீப் ராஜ் (14), மற்றும் பயிற்சியாளர் தங்கராஜ் உள்ளிட்ட ஆறு பேர் மணாலியில் இருந்து லே வரை சாகச சைக்கிள் பயணம் மேற்கொள்ள கடந்த ஜூன் 17ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்றுள்ளனர்.
அவர்கள் தற்போது காலை லே பகுதியில் சிக்கியிருப்பதாக உறவினர்ளுக்கு தெரிவித்திருந்த நிலையில் , தற்போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். அவர்களை உடனடியாக தமிழக அரசு மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..