கோவிலில் பூட்டை உடைத்து  வெள்ளி கிரீடம், தங்கதாலி கொள்ளை..!

அரூர் அருகே அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து  வெள்ளி கிரீடம். தங்கதாலி.உண்டியல் பணம் சுமார் 5. லட்சம் ரூபாய் கொள்ளை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ஈட்டிபட்டி கிராமத்தில்  பழமை வாய்ந்த அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை

 நேற்று இரவு இப்பகுதியில் நல்ல மழை பெய்து இருந்தது இந்த நிலையில் கோவில் சுற்று சுவரில் மேல் ஏறி உள்ளே இறங்கி கோவில் முன் பகுதியில் இரும்பு கேட் உள்ள பூட்டை உடைத்து அதன் பின் கருவறையின்கதவை உடைத்து 

 சாமி அணிந்திருந்த 4 கிலோ எடை உள்ள வெள்ளி கிரீடம் மற்றும் சாமி கழுத்தில் உள்ள  ஒரு பவுன்தாலிசெயின். மற்றும் அருகில் இருந்த உண்டியல் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணம்  கொள்ளையடித்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கோவில் பூசாரி கோவில் திறக்க போனபோது பூட்டை உடைத்து கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே தர்ம காத்தா ராஜசேகருக்கு தகவல் கொடுக்கும் உடனே அரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்து அரூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தர்மகத்தா ராஜசேகர் யிடம் கேட்டபோது சாமி வெள்ளிக் கிரீடம் நான்கு கிலோ எடை  சுமார் 4. லட்ச ரூபாய் ஆகும். மேலும் சாமி தாலி செயின் ஒரு பவுன் 50. ஆயிரம் ரூபாய். உண்டியில் சுமார் 50,000 ரூபாய் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக தங்கம். வெள்ளி பொருட்கள் உண்டியலில் போட்டு இருப்பார்கள்  மொத்தம் சுமார் 5. லட்சம் ரூபாய் கொள்ளை போனது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *