அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கொலை வழக்கில் மீண்டும் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

KN Nehru

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து தேவைப்படும் போது அவர்களை அழைத்து விசாரணை செய்வது என்பது பொதுவாக இருக்கும் நடைமுறை.

திண்டுக்கலை சேர்ந்த தினேஷ் என்பவரை அழைத்து மீண்டும் விசாரணை செய்தோம் – இதே போன்று மற்ற 11 பேரிடமும்  வழக்கமான விசாரணை என்பது தொடர்ந்து நடைபெறும். ராமஜெயம் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி ஜெயக்குமார் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *