“சோ சேட்…” பணி ஓய்வு பெறும் கடைசி நாளில் ஊழலில் கைதான நகராட்சி ஆணையர்…!

மேட்டூர் நகராட்சி பொறுப்பு ஆணையர் ஓய்வு பெறும்  நாளில், ஊழல் தொடர்பான வழக்கு உள்ளதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேட்டூர் நகராட்சி பொறியாளராக பணியாற்றியவர் மணிமாறன் (60).  இவர் சில வருடங்களுக்கு முன்பு நங்கவள்ளி பேரூராட்சியில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். 

அப்போது ஆழ்துளை கிணற்றுக்கு மோட்டார் வாங்கியதில் பேரூராட்சிக்கு  நிதியில்  இழப்பு ஏற்படுத்தியதாகவும், அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

இந்தநிலையில் ஜூன் 30 ஆம் தேதியான இன்று  இவர் பணி ஓய்வு பெறும் நிலையில் ,  இவரை பணி இடை நீக்கம் செய்து தமிழக அரசின் நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்தார். 

பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு  நாளுக்கு  முன்பாக மேட்டூர் நகராட்சி பொறுப்பு ஆணையர் மணிமாறன் , இன்று  பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *