ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
அரசியல் சாசன விதிகளை மீறுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரமன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் குடியாத்தம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் அமைச்சரை அமைச்சரவையில் சேர்ப்பதும் நீக்குவதும் முதல்வருக்கு உட்பட்ட அதிகாரம் என்றும் அரசியல் சாசன விதிகளை மீறி ஆளுநர் ஆர் .என். ரவி நடந்து கொள்வதாகவும் எனவே ஆளுநர் ரவியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஆளுநர் ரவியை கண்டித்து குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.