சளிக்கு பதிலாக சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்.

சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட விவகாரம் – கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர் பணியிடை நீக்கம்.

கடலூர் கோதண்டராமபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான கருணாகரனின் 12 வயது மகள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சளி சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சளி அதிகமாக இருப்பதாக கூறி ஒரு ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை வாங்கிச் செல்லுமாறு சீட்டு எழுதி கொடுத்துள்ளார். அந்த சீட்டினை ஊசி போடும் இடத்திற்கு தனது மகளுடன் எடுத்துச் சென்றார். 

அங்கிருந்த செவிலியர்கள் அந்த சீட்டை வாங்கி படிக்காமலேயே இரண்டு ஊசிகள் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாகரன் சீட்டு படிக்காமலேயே ஊசி போடுகிறீர்களே என கேள்வி எழுப்பிய போது நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கருணாகரன் சளித் தொல்லை க்காக தான் வந்ததாக தெரிவித்த நிலையில் செவிலியர்கள் அவரை சமானப்படுத்த முயற்சித்து உள்ளனர். 

ஆனால் அதே நேரம் ஊசி போட்ட சிறுமி திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கருணாகரன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில் கடலூர் அரசு மருத்துவமனையில் துறை ரீதியான விசாரணைக்கு இணை இயக்குனர் உத்தரவிட்டார். 

இந்த விசாரணையில் ஆஜரான அன்று பணியில் இருந்த செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அந்த ஊசி மாற்றி போட்டது கண்ணகி என்ற செவிலியர் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட பட்ட விசாரணையில் தான் கவனக்குறைவாக இதனை போட்டு விட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கண்ணகியை பணியிட நீக்கம் செய்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குனர் சாரா பால் செரின் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *