சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை..!
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்து குவிப்பு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேலூர் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி மாற்றப்பட்டது .
இதன் படி இவ்வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதாலும் அமைச்சர் பொன் முடி அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா உத்தரவிட்டார்.