திருப்பூரில் 15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த ஜார்கண்ட் மாநில இளைஞர் கைது

திருப்பூரில் 15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. திருப்பூர் பின்னால் ஆடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும் இங்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வட மாநிலமான பிஹார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், உள்ளிட்ட வர்கள் என சுமார் 12 லட்சத்திற்கும் மேலானோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த நபர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே கொடிக்கம்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து கொண்டு பினாலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிகேந்திற குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். 

சிறுமி வீட்டில் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பொழுது சிகேந்திர குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் பாலியல் துன்புறுத்தலும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் துன்புறுதலுக்கு ஆளான 15 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிகேந்திர குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் தொடர்ந்து திருப்பூர் மாநகரில் 18 வயதிற்கு கீழே உள்ள பெண்கள் இதுபோன்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையை அணுக வேண்டும் எனவும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *