காதலுக்கு தடையாய் இருந்த கணவனை போட்டுதள்ளிய மனைவி கைது

விளாத்திகுளம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதல் கணவனை  கூலிப்படையை  வைத்து கொலை செய்த முயற்சி செய்த மனைவி கள்ளக்காதலன் உட்பட மூன்று பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32) என்பவர் இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவரும் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த புனித ஆனின எப்சிபா(29) என்பவரும் 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதியினருக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது  சின்னவநாயக்கன் பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர்  

இந்நிலையில் அழகு சுந்தரபாண்டி கடந்த 8-ம் தேதி இரவு வேலையை முடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது சங்கலிங்கபுரம் அருகே சென்ற போது அவரது கிராமத்தைச் சேர்ந்த மாரிராஜ் பைக்கில் வந்துள்ளார் அப்போது அழகு சுந்தரபாண்டியிடம் பேசிக்கொண்டே வந்துள்ளார். திடீரென ஒரு இடத்தில் மாரிராஜ் நின்று விட அழகு சுந்தரபாண்டி மட்டும் சென்றுள்ளார் பைக் சல்லி செட்டிபட்டி கிராமம் அருகில் சென்ற போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த  2 மர்ம நபர்கள் அழகு சுந்தர பாண்டியை வழி மறித்து அருவாளை எடுத்ததும்  சுதாரித்துக் கொண்ட அழகு சுந்தரபாண்டி அங்கிருந்து வண்டியில் வேகமாக செல்ல மர்ம நபர்கள் அழகு சுந்தரபாண்டி மீது தான் வைத்திருந்த அருவாளை வீசியுள்ளனர்  

சுதாரித்துக் கொண்ட அழகு சுந்தரபாண்டியன் வேகமாக பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போதும் அந்த மர்ம நபர்கள் விடாமல் கீழே விழுந்த அரிவாளை எடுத்துக்கொண்டு துரத்திச் சென்று அழகு சுந்தரபாண்டியை வெட்டியுள்ளனர். தப்பித்து ஊரின் அருகே சென்றதும் ஆள் நடமாட்டத்தை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி  சென்றனர். இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தோடு, லேசான காயம டைந்த அழகு சுந்தரபாண்டியை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர், இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில் : இச்சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அழகு சுந்தரபாண்டியுடன் பேசிக்கொண்டே வந்து நபர் தீடீரென  மாயமான கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாரிராஜ்சு க்கும், அழகு சுந்தரபாண்டியின் மனைவி புனித ஆனி எப்சிபாவிற்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும்  தன்னுடைய கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த புனித ஆனி எப்சிபா, கள்ளக் காதலன்  மாரிராஜ்(31) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(20) ஆகியோருடன் சேர்ந்து அழகு சுந்தரபாண்டியை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக  மதுரையிலிருந்து கூலிப்படையினரை வரவழைத்தது ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பேசியதில், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அழகு சுந்தரபாண்டியின் மனைவி புனித ஆனி எப்சிபா உட்பட 3 பேரையும் கைது செய்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புனித ஆனி எப்சிபா-வை பாளையங்கோட்டை கொக்கிரக்குளம் சிறையிலும், மாரிராஜ் மற்றும் சரவணனை கோவில்பட்டி கிளைச்சிறையிலும் அடைத்தனர். 

மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *