ஓசி பீடி சண்டையில் 70 வயது முதியவரை அடித்து கொன்ற இளைஞர் கைது…! 

ராசிபுரம் அருகே 70 வயது முதியவர்  கட்டையால்  தலையில் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் கைது . ஓசியில் பீடி கேட்டதை தட்டி கேட்டு கேவலப்படுத்தியாதால்  ஆத்திரம அடைந்த அருண்குமார் திட்டமிட்டு முதியோரை அடித்துக் கொண்டதாக வாக்குமூலம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பேரூராட்சியில் ரேடியோ செட் கடை நடத்தி வருபவர் சுப்ரமணி (70) (ஓய்வு பெற்ற மின்வாரியஊழியர்). இவருடைய மகன்கள் அதே பகுதியில் அருகில் வசித்து வரும் நிலையில் இவர் ரேடியோ செட் கடையிலேயே தனியாக வசித்து வருகிறார்.

ரேடியோ செட் தொழிலில் வேலை இல்லாத நாட்களில் இவர் வீடு வீடாக தண்ணீர் கேன் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்களால் இவர் தலையில் கட்டையால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் (20) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் சுப்பிரமணி கடை அருகே உள்ள பெட்டி கடைக்கு சென்று அடிக்கடி ஓசியில் பீடி  கேட்டு வாங்குவதாகவும் அதற்கு சுப்பிரமணி தன்னை கை கால்கள் நன்றாக தானே இருக்கிறது உழைத்து சாப்பிட வேண்டியதுதானே எனவும், இந்தப் பிழப்பிற்கு நீ பிச்சை எடுக்கலாம் எனவும்  மோசமாக கிண்டல் செய்ததாகவும் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரை திட்டமிட்டு கட்டையால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.இதன் அடிப்படையில் அருண்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ஓசியில் பீடி கேட்ட விவகாரத்தில் முதியவர் கொலை செய்யப்பட்டது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *