விவசாய நிலங்களை நாசமாக்கும் பாகுபலி யானையை விரட்ட படாதபாடுபடும் வனத்துறை…

மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதால் அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதி வழியாக கடந்து சென்ற பாகுபலி யானையை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நெல்லி மலை மற்றும் கல்லார் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றித் திரியும் காட்டு யானைகளில் பாகுபலி என்ற யானை அடிக்கடி குடியிருப்பு பகுதி வழியாக கடந்து சென்று வருகிறது பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத இந்த காட்டு யானை இன்று அதிகாலை சுக்கு காபி கடை என்ற இடத்தில் குடியிருப்பு வழியாக கடந்து சென்றது

இந்த யானை பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் காரணத்தினால் இந்த யானையை மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் பாகுபலி என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள் இந்த யானையைப் பொறுத்தவரை அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நெல்லி மலையில் இருந்து கல்லார் வனப்பகுதிக்கும் கல்லார் வனப்பகுதியில் இருந்து நெல்லி மலை வனப்பகுதிக்கும் இடம்பெயர்ந்து செல்லுவது வழக்கமான ஒரு நிகழ்வாக உள்ளது

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பாகுபலி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சில சமயங்களில் யானையை பட்டாசு வெடித்தும் சத்தமிட்டும் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில் இன்று காலை நெல்லி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த யானையை நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி விட்டனர்

அமைதியாக நடமாடி வந்த பாகுபலி யானை கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாகவும் இதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *