கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி அடுத்துள்ள பசவனதொட்டி கிராமத்தில் மழையின் காரணமாக பழமையான ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சுரேஷ் – சசிகலா தம்பதிபினரின் மூன்று வயது மகன் பிரக்ருத் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் பெய்த கன மழையால் சுரேஷின் பழமையான ஓட்டு வீடு சுவர்கள் மழைக்கு நனைந்து இருந்து வந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே மூன்று வயது குழந்தை பிரக்ருத் விளையாடி கொண்டிருந்தான் அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து குழந்தையின் மீது விழுந்ததில் குழந்தை படுகாயமடைந்தது.
குழந்தை மீட்ட பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து குழந்தை இறந்து விட்டதாக தகவல் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.