கணவன் மனைவி சண்டையில் குறுக்கே வந்த மாமியாருக்கு கத்திக்குத்து…!
வத்தலகுண்டு அருகே கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையில் இடையில் வந்த மாமியாருக்கு கத்திக்குத்து – மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்து பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை உள்ளது. இந்த பகுதியில் முத்துசாமி வயது 31 இவர் சொந்தமாக வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி சூர்யா(வயது 25) இருவரும் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் சூர்யாவுடைய அம்மா மகாலட்சுமி (வயது 45) இவரது கணவர் முனியாண்டி (வயது 50) அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
முத்துசாமிக்கும் அவரது மனைவி சூர்யாவுக்கும் அடிக்கடி சண்டை வருவதும் சூர்யா கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு செல்வதும் மறுபடியும் முத்துசாமி வீட்டிற்கு மனைவியை அழைத்து வருவதும் மறுபடியும் சண்டை போடுவதுமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மறுபடியும் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. மீண்டும் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சூர்யா சென்றுள்ளார்.
மனைவியை வழக்கம்போல் கூப்பிடுவதற்கு செல்லும்போது அங்கு இருவருக்கும் தகராறு ஏற்படவே மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை தாக்கும் போது நடுவில் மாமியார் மகாலட்சுமி வந்து தடுத்ததால் கத்தி மகாலட்சுமி தலையிலும் கன்னத்திலும் தாக்கியது உடனே அருகில் இருந்த பொதுமக்கள் மகாலட்சுமியை வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கொலை வெறியுடன் தாக்கிய முத்துசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.