யூடியூபில் லைக், ஷேர் செய்தால் பணம்… பல லட்சத்தை ஏமாற்றிய அப்டேட் ஆசாமி…!

யூடியூபில் லைக், ஷேர் செய்தால் பணம் சைபர் கிரிமினல்கள் வீசிய வலையில் வீழ்ந்த வாலிபர் கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு பகுதிநேர வேலை என்ற பெயரில் வாட்ஸப்பிற்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கிறது. 

அதில் ஆம்னிகாம் மீடியா குரூப் நிர்வாகி ஒருவர் பேசுவதாக தெரிவித்து இருக்கின்றார். அப்போது யூடியூப் சேனல்களுக்கு லைக் ஷேர் செய்வதன் மூலம் கமிஷன் பெறலாம் என தெரிவித்திருக்கின்றார். டாஸ்க் கம்ப்ளீட் செய்ய வேண்டும் என்று தெரிவித்த அந்த நபர் அதற்கு பணம் கட்ட வேண்டும் என தெரிவித்திருக்கின்றார். 

இதில் முதல் டாஸ்காக 150 ரூபாய் முதலீடு செய்து 150 ரூபாய்க்கு மேலாக பணத்தை திரும்ப பெற்று இருக்கின்றார். பின்னர் 5,000 ரூபாய் முதலீடு செய்து 6,400 பெற்று இருக்கின்றார். அப்போது அதிகளவிலான பணம் சம்பாதிக்கலாம் என எண்ணிய வாலிபரை இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய ஆசை தூண்டியிருக்கின்றனர்  . 

இதனை நம்பி பல்வேறு தவணைகளாக 16 லட்சத்து 79 ஆயிரத்து 446 ரூபாய் முதலீடு செய்திருக்கின்றார். ஆனால் முதலீடு செய்த பணம் வித்ரா செய்ய முடியவில்லை. பின்னர் அந்த வாலிபர் சைபர் கிரிமின்களால் ஏமாற்றப்பட்டது அறிந்து சிட்டி சைபர் காவல் நிலையத்தில் புகார் தந்தார் . புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *