இறந்த காவலரின் உடலை சுமந்த மாவட்ட கண்காணிப்பாளர்… நெகிழ்ச்சியான மொமண்ட்…!

இறந்த காவலரின் உடலை இறுதி அஞ்சலியில்  சுமந்த மாவட்ட கண்காணிப்பாளர் கல்லூர் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணனின் உடல் 30 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் காவல் சரகத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் நவநீதகிருஷ்ணன், இவர் நேற்று திருமயம் தாலுகா கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நவநீதகிருஷ்ணனை மாடு முட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு காவலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே சம்பவ இடத்திற்கு வந்து இறந்த காவலர் நவநீதகிஷ்ணனின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். 

அதனை தொடர்ந்து அறந்தாங்கி எல்.என்.புரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அதே பகுதியில் உள்ள மயானக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 30 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மஞ்சுவிரட்டு போட்டியில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *