சுடுகாட்டை கையகப்படுத்தியதால் ரோட்டில் சடலத்தை அடக்கம் செய்து போராட்டம்
சுடுகாடு வேண்டி சாலை அமைக்கும் இடத்தில் இறந்தவரின் உடலை எரித்து மக்கள் போராட்டம். சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்கும் பணியின் காரணமாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள சுடுகாடு சாலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தப்பட்டு இருப்பதால் சுடுகாடுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படாததால்
அப்பகுதியில் இறப்பவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
சுடுகாடுக்கு மாற்று இடம் ஒதுக்ககோரி அப்பகுதியை சேர்ந்த உயிரிழந்த கார்த்திகேயன் என்பவரின் சடலத்தை சாலை விரிவாக்கும் செய்யும் இடத்தில் வைத்து இறுதிச் சடங்கு செய்து எரித்து கிராம மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.