கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம்‌ ஒத்திவைப்பு..!

ஈரோடு மாவட்டம் பவானியில் நாளை நடைபெற இருந்த கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பவானி நமது நிலம் மீட்பு குழு அமைப்பு அறிவித்துள்ளது.

பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு.

வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் என குறிப்பிடப்பட்டு பவானி நகரில் 80 சதவீத நிலங்கள் வாரியத்திற்கு சொந்தமானது என கூறி அதன் சர்வே எண்களை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி அந்த சர்வே எண் உள்ள நிலங்களை பத்திர பதிவு செய்யக்கூடாது என எட்டு மாதங்களுக்கு முன்பு வாரியத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது, இதன் காரணமாக அங்கு தற்போது உள்ள உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அடமானம் வைக்கவும் விற்க முடியாமலும் தவித்து வந்த நிலையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது , 

இந்த நிலையில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் என திருத்தப்பட்டு புதிய சர்வே எண்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, வாரியத்திற்கு சொந்தமானது என சுமார் ஒன்றை ஏக்கர் நிலங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் காரணமாக முன்னர் தடை விதிக்கப்பட்டு இருந்த சர்வே எண்களுக்கு தற்போது தடை நீக்க பட்டு அந்த சர்வே எண்ணில் உள்ள நிலங்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்ட குழு அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *