அக்டோபர் 6-ம் தேதி முதல்.. ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர்..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்தல் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

தற்போது மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அதன் படி, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். குறிப்பாக கடந்த மாதத்தில்13 ஆயிரத்து 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதில் செய்து அதில் 13, 113 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், அக்டோபர் 6 முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *