கோவையில் அக்டோபர் 2-ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை!!
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்துவிதமான ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அதே போல் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் கடைகளை மூடி வைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அன்றைய தினத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளான உக்கரம், சக்தி ரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்பட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தரவை மீறி கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது எனவும் மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.