ஆசிரியர் தகுதி தேர்வு: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் அக்.14-ம் தேதி முதல் அக்.20-ம் தேதி வரையில் இருவேளைகளிலும் ஆசிரியர் தகுதி த்ர்ரெவு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இரண்டு முறை ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் மூலம் நடத்தப்படும், தகுதித் தேர்வான இரண்டுமுறை நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. குறிப்பாக ஏற்கனவே அக்டோபர் 17-ம் தேதி முதல் 20 தேதி வரையில் தேர்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பல்வேறு காரணங்களினால் தேர்வுகளானாது தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அக்.14-ம் தேதி முதல் அக்.20-ம் தேதி வரையில் இருவேளைகளிலும் நடைப்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கணினி மூலம் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலமாக இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் பங்கேற்பதற்கான ஆல் டிக்கெட் குறித்த தகவல் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.