வேகமெடுக்கும் மர்ம காய்ச்சல்: தமிழகத்தில் 8 பேர் மரணம்!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதங்களில் இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக 8 பேர் உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஃபுளூ காய்ச்சல் பாதிப்பானது கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான காய்ச்சல் வார்டுகள் நிரம்பி வலிகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் 282 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதில் அரசு மருத்துவ மனைகளில் 13 பேரும் தனியார் மருத்துவ மனைகளில் 215 பேரும், வீட்டு தனிமையில் 54 பேர் கிசிச்சைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு போடப்பட்டதால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பானது குறைவாகவே காணப்பட்டது.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்படுள்ளதால் வைரஸ் பாதிப்பானது மீண்டும் வேகமெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதே போல் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *