12 வயது சிறுமி கர்ப்பம்: தந்தை உட்பட 3 பேர் போக்ஸோவில் கைது!!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பாலியியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியில்வசித்து வருபவர் 47 வயதான லிங்கமூர்த்தி. இவர் சமையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இவருக்கு 12 வயதில் மகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடி பழக்கம் உள்ள இவருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த சூழலில் குடிப்பழக்கத்தின் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த சூழலில் மனைவி தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் லிங்குசாமி சமையல் வேலைகளுக்காக வெளியூர் செல்வதால் தனது தனது நண்பரான கண்ணன் (வயது55) வீட்டில் மகளை தங்க வைத்துள்ளார். இந்த சூழலில் குடிப்போதையில் இருந்த லிங்கமூர்த்தி, அவரது நண்பர் கண்ணன், முகமது ரபிக் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சூழலில் சிறுமி கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ மனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 3 பேரையும் போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *