சித்தோடு அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: போலீசார் விசாரணை!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக இத்தகைய விளையாட்டால் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள மாமரத்துபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கட்டுமான பணிகளுக்காக வெங்கேடஷ் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரின் மனைவி வசந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வந்தது.

இதனால் உடனே மருத்துவமனை சென்று பார்த்த போது பலத்த காயங்களுடன் இருந்தார். அவரிடம் விசாரித்த போது, வசந்தியின் சகோதரி மகனான பிரகாஷ் அவரை தாக்கியது தெரியவந்தது. எலெக்ட்ரிகல் வேலை பார்த்து வரும் பிரகாஷ், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்திருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட கடனை அடைக்க தன் சித்தியிடம் இருந்த நகைகளை பறிக்க திட்டமிட்டார். இதற்காக இரும்பு கம்பியுடன் சென்ற அவர், சித்தியை கொடூரமாக தாக்கி நகைகளை எல்லாம் பறித்துச் சென்றது உறுதியானது. இதன்பேரில் போலீசார் பிரகாஷை கைது செய்ததோடு அவர் வசமிருந்த நகைகளை மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *