சட்டவிரோத மணல் திருட்டு… தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி?

தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகியதாகவும், அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தொண்டி மணல்கள் திருடப்பட்டு வருவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளைக் கொண்டும் ஆற்றுக்கு செல்வதற்கு பாதைகள் அமைத்து ஆற்று மணலை திருடி வருவதாக கூறியுள்ளார்.

அதே போல் சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான அமர்வானது நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும், சட்ட விரோத மணல் திருட்டு நடைப்பெற்று வருவதாக கூறியுள்ளனர்.

இத்தகைய சம்மபவம் எப்படி நடைப்பெறுகிறது என கேள்வியெழுப்பி உள்ளனர். அதோடு தமிழகம் முழுவதும் சட்ட விரோதமான மணல் திருட்டு இருக்கவே கூடாது என கூறிய நீதிபதிகள், இத்தகைய வழக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *