பள்ளி மாணவன் மரணம்: குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்தாக வாக்குமூலம்!!

காரைக்கால் அடுத்த நேருநகர் பகுதியை சேர்ந்தவர் பால மணிகண்டன். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட போட்டி காரணமாக கடந்த 2ஆம் தேதி குளிர்பானத்தில் விஷம் கொடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காரைக்காலில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக இன்று மதியம் முதல்வர் ரங்கசாமி இரண்டு மருத்துவர்களை பணியிடம் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த சூழலில் சகாயராணியை காரைக்கால் நகர் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது வாக்குமூலம் பெறப்பட்டதில் பேதி மருந்து மட்டும் கொடுத்து மாணவனை கொலை செய்ததாக ஏற்கனவே சகாயராணி வாக்குமூலம் அளித்திருந்தார்.

தற்போது, கடையில் எலி பேஸ்ட் வாங்கி மாணவன் பாலமணிகண்டனை கொன்றதாக சகாயராணி வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மகளைவிட நன்றாக படித்ததால் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து மாணவனை சகாயராணி கொலை செய்ததாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *