மாணவி ஸ்ரீமதி! தாய் செல்வி மாற்றி பேசியதாக தகவல்!!
கள்ளக்குறிச்சியில் படிக்கும் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் மாணவியின் தாய் செல்வி பள்ளி நிர்வாகத்திற்கும் சென்று விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார்.
இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பின்னர் நிபந்தனை ஜாமின் மூலம் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதி தாய் மற்றும் 9 பேர் கொண்ட குழுவினர் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சிசிடிவி ஆதாரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதோட மாணவியின் உயிரிழந்தது குறித்து இழப்பீடு வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மாணவியின் தாயிடம் தொடர்பு கொண்ட போது இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறினார்.
அதோடு மாணவியின் மரணம் குறித்து நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகவும் ஸ்ரீ தாய் செல்வி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.