சாப்பாட்டில் எலி தலை: ஓட்டலில் அதிரடி ஆய்வு நடத்தியதில் காத்திருந்த அதிர்ச்சி!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் சைவ உணவகத்தில், காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர், துக்க நிகழ்வுக்காக மொத்தமாக உணவு வாங்கியுள்ளார்.

இந்நிலையில் துக்க நிகழ்வுக்கு வந்த 30க்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்ட நிலையில், பீட்ரூட் பொரியலில் தலை இருந்த‌தாக கூறப்படுகிறது. இதன் காரணமக, முரளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் ஆய்வு நடத்துவதற்கு முன்பே உணவகத்தில் இருந்து எலி ஓடியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், நோட்டீஸ் மீது, உணவகம் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதன் பிறகு சைவ உணவகத்தில் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *