ஆயுத பூஜை கொண்டாட்டம்: 5 வகை இனிப்பு, ஒரு காரம் ஆவினில் விற்பனை!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஆயுதபூஜைக்கு ஐந்து வகையான சிறப்பு இனிப்புகள், ஒரு கார வகைய தயாரித்து விற்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி 220 வகையான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பண்டிகை காலங்களில் சிறப்பு வகை இனிப்புகள் விற்கப்படுகிறது.
அதன் படி, வருகின்ற ஆகஸ்ட் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட 200 கோடி ரூபாய்க்கு இனிப்புகளை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 4-ம் தேதி ஆயுதபூஜைக்கு ஐந்து வகையான சிறப்பு இனிப்புகள், ஒரு கார வகைய தயாரித்து விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நெய் பாதுஷா 250 கிராம் – 190 ரூபாய்; நட்ஸ் அல்வா 250 கிராம் – 190; ஸ்டப்டு மோதி பாக் 250 கிராம் – 180; காஜூ பிஸ்தா ரோல் 500 கிராம் – 320; காஜூ கத்லி 250 கிராம் – 260 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. மேலும், கலவை இனிப்புகள் அடங்கிய பெட்டி 250 கிராம் – 450 ரூபாய்; மிக்ஸர் 250 கிராம் – 100 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. மொத்தமாக இனிப்பு மற்றும் மிக்ஸர் வாங்குவோருக்கு சலுகை வழங்கப்பட உள்ளது.