கோர விபத்து!! தேனியில் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!
ஆண்டிப்பட்டி அருகே உள்ள அதிவேகமாக வந்த அரசு பேருந்து சரக்கு வேன் மீது மோதிய பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கி மாலை 4.30 மணியளவில் ஆண்டிப்பட்டையை கடந்து அரசு பேருந்து மதுரையை நோக்கி டி.சுத்தாரம் விளக்கு பகுதியில் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது நூல் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது அரசு பேருந்து அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் சங்கரன் நாராயணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.