அதிர்ச்சி!! மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவர்களுக்கு வாந்தி,மயக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மோத்தக்கல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே வழக்கம்போல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அப்போது மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட போது வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் இருக்கும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *