ஓணம் பண்டிகை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் 500 டன் பூக்கள் விற்பனை ஆகியுள்ளது.

கேரள மக்களின் திருவிழாவாக கருதப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடியவிடிய தோவாளை மலர் சந்தையில் விற்பனை நடைப்பெற்றது. இதில் 500 டன் பூக்கள் விற்பனை ஆகியது அதேசமயம் பூக்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து காணப்பட்டது.

அதன் படி, மல்லிகைப் பூ ரூ.5,000-க்கும், பிச்சி பூ 2,500 ரூபாய்க்கும், வாடாமல்லி கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது. அதே போல் வெள்ளை சிவந்தி கிலோ. 400 ரூபாய்க்கும், அரளிப்பூ கிலோ.300 ரூபாய்க்கும், மஞ்சள் கேந்து பூ ரூ.100-க்கும் விற்பனையானது.

இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்திலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன் படி, மல்லி பூ ரூ.3500 ரூபாய்க்கும், கனகாம்பரம் ரூ1,200 ரூபாய்க்கும், முல்லை ரூ.700 -க்கு விற்பனையாகிறது.

மேலும், தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *