குமரி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

நீர்தேக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 117 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் தற்போது 46 அடியை நெருங்குகிறது.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் அணையின் நீர்மட்டம் 1300 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,117 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதே போல் 77 கன அடி உள்ள பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.77 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கூடுதலாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பெருஞ்சாணி அணையின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *