காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: செப்.15-ல் தொடக்கம்!!

காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகின்ற 15ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்க இருப்பதாகவும், அதன் படி,1,545 முதற்கட்டமாக தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய திட்டத்திற்கு 33 கோடி 55 லட்சம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. அதன் படி, அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று பள்ளிகளில் காலை சிற்றுண்டி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை உள்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவர்களுக்கும், தமிழகத்தில் 23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *