கனமழை எதிரொலி: மேட்டுப்பாளையம் ரயில் சேவை ரத்து!!
உதகமண்டலம் மேட்டுப்பாளையம் ரயில் பாதை மழையால் சீர்குலைந்த நிலையில், அதனை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேற்றுமுன்தினம் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக மலை ரயில் பாதைகளில் 2 இடங்களில் பெரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் மலைப்பாதைகளை மரங்கள், பாறைகள் இரயில் தண்டவாளங்களை மறைத்துள்ளது.
இதன் காரணமாக நேற்றைய தினத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதோடு மறு உத்தரவு வரும் வரையில் சுற்றுலா பயணிகள் காத்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த சூழலில் நேற்று மாலை ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அதேசமயம் பாறைகள் பெரிய அளவில் இருந்ததால் வெடிவைத்து தகர்த்து வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இந்த நிலையில் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்று அதனை செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.