நீட் தேர்வு விடைத்தாள் மாறியதாக புகார்!! இன்று விசாரணை!!

கைரேகை பதிவுகளை வைத்து தனது நீட் தேர்வு விடைத்தாள்களை கண்டுபிடிக்கவும், அதுவரையில் ஒரு மருத்துவ இடத்தை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த பவமர்த்திணி என்ற மாணவி சென்னை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 600 க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 132 மதிப்பெண் பெற்ற விடைத்தாள் தமக்கு வழங்கப்பட்ட இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் விடைத்தாளில் சுயவிபரம் அடங்கிய பகுதி வேறு ஒரு மாணவியின் விடைத்தாள் உடன் இணைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக விடைத்தாள்களை கண்டுபிடிக்கும் வரையில் ஒரு மருத்துவ இடத்தை காலியாக வைக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை அமர்வு இன்று வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *