நீச்சல் தெரியாததால் விபரீதம்!! பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பலி!!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீச்சல் தெரியாமல் நண்பர்களுடன் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்ற மாணவர் கோவூர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது நண்பர்களான சூர்யா மற்றும் யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் நீச்சல் தெரியாத அவர் ஏரிக்கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் சூர்யா நீச்சல் அடித்தபடி குளித்து கொண்டிருந்த போது, ஜெகதீசனை நீச்சல் அடிக்கும்படி ஏரியில் இறக்கியுள்ளார். இதை யுவராஜ் வீடியோ எடுத்துள்ளார்.

இதனிடையே நீச்சல் தெரியாத ஜெகதீசன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து நீரில் மூழ்கிய ஜெகதீசனை இறந்த நிலையில் பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *