ஓணம் பண்டிகை: செப்.8-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!

கேரளாவில் செப்டம்பர் 8-ம் தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 08.09.2022 தேதி வியாழன்கிழமை அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், உள்ளூர் விடுமுறை நாளான 08.09.2022 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே போல் தலைநகர் சென்னை மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *