குற்றாலத்தில் தந்தை, மகள் விபரீத முடிவு!!
குற்றாலம் தனியார் விடுதியில் விஷம் அருந்தி 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவி அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 31-ந்தேதி இரவு மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் தனது குடும்பத்தினருடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதிப் பணியாளர் கதவை உடைத்து பார்த்துள்ளார்.
அப்போது குடும்பத்தினர் அனைவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகில் விடுதிப் பணியாளர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் தந்தை, மகள் ஆகிய இருவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
அதே போல் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தகவலறிந்து வந்த குற்றாலம் போலீசார், மயக்க நிலையில் இருந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.