எம்மாடியோ!! ஒரு கிலோ மல்லி 2500 ரூபாயா?

Jasmine

திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பூக்களின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. ஆவணி மாதத்தில் முகூர்தம் ஓணம் பண்டிகை அடுத்தடுத்து வருவதையொட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. கேரளாவின் வருகின்ற எட்டாம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் திண்டுக்கல் மலர் சந்தையில் இருந்து நாளொன்றுக்கு 50 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டுச்செல்லப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம் ரூ.1000-க்கு விற்பனையான மல்லிகைப்பூவின் விலையானது தற்போது ரூ.2500-க்கு விற்பனையாகிறது. அதே போல் கனகாம்பரம் ரூ.500 ரூபாய்க்கும், முல்லைப்பூ ரூ.650 ரூபாய்க்கும், ஜாதிமல்லி ரூ.400 ரூபாய் என விற்பனையாகிறது.

இதனை தொடர்ந்து சம்மங்கி ரூ.200-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வரும் காலங்களில் பூக்களின் விலையானது கிடுகிடுவென அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *