மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: நாளை முதல் தொடக்கம்!!
தமிழகத்தின் நடப்பாண்டு பட்ஜெட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் மாணவிகள் வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டுக்கு மட்டும் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் முழுவதுமாக ஆன்லைனில் மட்டும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் F1,000 வழங்கும் திட்டத்தை நாளை செப்டம்பர் தொடங்கி முதலமைச்சர் N மு.க.ஸ்டாலின் தொடங்கவைக்கவுள்ளார்.
மேலும், இத்தகைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.