நீட்தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை: தென்காசியில் சோகம்!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த குலசேகரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் மாணவி ராஜலட்சுமி. இந்நிலையில் மாணவி நீட் தேர்வு எழுதிய நிலையில் 2 முறை தோல்வியடைந்துள்ளார்.

இந்த சூழலில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், அதன் வினாத்தாள் விடை வெளியாகியது. விடைத்தாளை பார்த்ததில் இருந்து ராஜலட்சுமி சோகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக தேர்வில் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற எண்ணத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் வீட்டில் பார்த்தப்போது மகள் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி படித்த நீட் தேர்வு புத்தகங்களை கீழே கொட்டி பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *