பேருந்து விபத்தில் காவலர் பலி! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேனியில் விபத்தில் பலியான காவலரின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்த காவலர் வனராஜன், 1998 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவலரின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் அவரது மகன்கள் தொடர்ந்த வழக்கி தொடர்ந்தனர்.

இதனிடையே 18 லட்சம் இழப்பீடு வழங்க கோவை மண்டல அரசு பேருந்து கழகத்திற்கு பெரியகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டு தொகையாக 15 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீதமுள்ள தொகையை வழங்க நீதிமன்றம் 5 மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.

அதன்படி இழப்பீடு வழங்கப்படாததால், கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை சப்தி செய்த நீதிமன்றம் உத்தரவிட, அதன்படியே பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *