நாளை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை 22 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 20 செ.மீ.மழை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *